சுற்றுலா பயணி மீது செருப்பு தாக்குதல்!பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை(Video)
வெளிநாட்டிலிருந்து வருகைதந்த சுற்றுலா பயணி மீது செருப்பு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தொடருந்தில் பயணித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரொருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த காணொளியில் தொடருந்தில் பயணிக்கும் வௌிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது தொடருந்து வீதிக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் அவரின் பாதணியை வீசி தாக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
காணொளியை அடிப்படையாக கொண்டு விசாரணை
இந்த காணொளியை அடிப்படையாக கொண்டு பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த தொடருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் காலை நேரத்தில், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, குறித்த சந்தேகநபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
