உயிரிழப்பதற்கு முன்னர் நள்ளிரவில் சனத் நிஷாந்த பதிவு செய்த தகவல்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு ஏற்பட்ட விபத்துக்கு சற்றுமுன்னர் தனது முகநூலில் காணொளி பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் "வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்." - என அந்த காணொளி பதிவு அமைந்துள்ளது.
இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் குறித்த பதிவை இட்டுள்ளார்.
2 மணியளவில் விபத்து
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்திருந்தது.
இதன்மூலம் அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது இந்த பதிவை பேஸ்புக் தளத்தில் வெளியிட்டிருக்காலாம் என்பது தெரியவருகிறது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
