நாமல் ராஜபக்சவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறிய சனத் ஜயசூரிய
தொடர்ந்தும் விளையாட்டில் தோல்வியடைந்து, அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஒரு வீரர், தன்னால் திறமைகளை வெளிக்காட்டக் கூடிய வேறு ஒரு விளையாட்டை தெரிவு செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பட்ட வீரரும், டெஸ்டன் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
When players FAIL repeatedly and are dropped from a team they should have the decency to take up another sport instead of coming for team meetings and embarrassing the new captain ! #GotaGoHome pic.twitter.com/6phhLoY4ji
— Sanath Jayasuriya (@Sanath07) June 19, 2022
இதனை விடுத்து மீண்டும், மீண்டும் அணியின் கூட்டங்களில் கலந்துக்கொண்டு, புதிய தலைவரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கக் கூடாது எனவும் சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
எரிசக்தி அமைச்சில், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடத்திய செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்துக்கொண்டிருந்தார். இது சம்பந்தமாகவே சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவை இட்டுள்ளார்.