தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சிக்கு இடமளியாதீர்: சம்பந்தன் அறிவுறுத்து
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம் என்றும் அந்த முயற்சிக்குக் கடைசி வரை வாய்ப்பளிக்காதீர்கள் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் இன்றைய தினம் (17.05.2024) தொலைபேசியில் உரையாடிய விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தன் விவரித்ததாவது,
“மாவை சேனாதிராஜாவுடன் இன்று காலை மீண்டும் கலந்துரையாடினேன். வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம்.
அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கக் கூடாது, இடமளிக்கவும் கூடாது. கட்சிக்குள் இது தொடர்பான விடயத்தை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள் என்று அவருக்குக் கூறியுள்ளேன்.
சிறீதரனுக்கும், சுமந்திரனுக்கும் இது குறித்து நான் நேரில் விவரமாகத் தெரிவித்துள்ளேன்.
சிறீதரன் தம்மை வந்து சந்தித்து அது பற்றி கூறினார் என்று மாவை சேனாதிராஜா எனக்குப் பதில் அளித்தார்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
