சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் இடமாற்றம்
அம்பாறை - சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக பணியாற்றி வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை(05.1.2026) பதவியேற்கவுள்ளார்.
பதவி நீக்கம்
கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவானாக செயற்பட்ட காலத்தில், நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலையில் உள்ள பொருட்கள் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருட்களை மோசடி செய்த குற்றச் சாட்டின் அடிப்படையில், அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் கைதுச் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும், நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து, நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் கடந்த 02.01.2026 அன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.