முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க விசாரணைக்கு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி அவர் நாளையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்; முன்னிலையாகவுள்ளார்.
தேசபந்து அளித்த வாக்குமூலம்
ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரின் பயணத்துக்கான நிதியை ஜனாதிபதி செயலகமே ஒதுக்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சமன் ஏக்கநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam