பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் அவர்களின் மேலதிக கொடுப்பனவு மற்றும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் சம்பளப் பட்டியலில் நிலவும் முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்..
வேலைநிறுத்தப் போராட்டம்
இதற்கிடையே பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை தங்கள் கோரிக்கை தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் தீவிரமான முறையில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ளப் போவதாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri