சுப நேரத்திற்காக 10 மாதங்கள் காத்திருந்த ரணில்! சோதிடத்தை நம்பும் ஜனாதிபதி - சபையில் வெளியான தகவல்
எனது தந்தையின் பிறந்த நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சுப நாளாக காணப்பட்டது, ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சோதிடத்தை அதிகம் நம்புபவர், அவருக்கே தற்போது சுபநேரம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், தீப்பற்றி எரிந்த நாட்டை தான் பொறுப்பேற்றதாகவும், நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்த்தை பொறுப்பேற்காமல் ஒருசிலர் சோதிடம் பாரத்துக் கொண்டு நல்ல நேரம் வரும் வரை காத்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுபநேரத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கவில்லை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் சுபநேரத்திற்காக பல மாதங்கள் காத்துக் கொண்டிருந்தார். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது.
அந்த ஒரு ஆசனத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எவரும் நாடாளுமன்றத்திற்கு வருகை தரவில்லை. 2021.06.23ஆம் திகதி எனது தந்தையின் பிறந்த தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 10 மாதங்கள் கடந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,