சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு: ப.சந்திரகுமார்

Batticaloa Ilankai Tamil Arasu Kachchi Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Bavan Sep 19, 2024 01:55 AM GMT
Report

தமிழர்களின் ஏக பிரதிநிதியான தமிழரசுக்கட்சியே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று கிடைக்கும் என ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - திருமலை வீதி தாண்டவன்வெளி பிரதேசத்திலுள்ள மக்கள் சக்தி கூட்டணியின் மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரின் காரியாலயத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல்

புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல்

 

சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு: ப.சந்திரகுமார் | Sajith Premadasa Support In Tamil Arasu Katchi 

தமிழரசுக்கட்சி சிதைப்பு

விடுதலைப்புலிகளின்  போராட்டத்தை சிதைத்தது போன்று தமிழரசுக்கட்சியை சிதைப்பதற்கு ஆயுதம் தாங்கி  போராடி இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்த ஓட்டுக்குழுக்கள் எல்லோரும் சேர்ந்த குழுவே இந்த தமிழ் பொது வேட்பாளர். எனவே மக்கள் தமிழரசுக்கட்சி ஆதரிக்கும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச்செய்வார்கள்.

ஆயுதம் தாங்கி போராடி இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்த ஓட்டுக்குழுக்கள் எல்லோரும் இந்த தமிழ் பொது வேட்பாளருடன்  சேர்ந்திருக்கின்றனர். எனவே ஒட்டுக்குழுக்கள் தான் பொது வேட்பாளர்.

எனவே ஆளும் கட்சி என்பது ஜனநாயக கட்சி அது தேசிய கட்சி. நாட்டில் எல்லா பாகங்களிலும் கிளையுண்டு அது தரகர் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு இயங்குகின்றது.

இந்த பொது வேட்பாளரில் நா.உறுப்பினர்;  சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பன், அவ்வாறே மட்டக்களப்பில் ரேலோ கட்சியின் நா.உறுப்பினர் கோ.கருணாகரன், வெளிப்படையாக மக்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து வருகின்றார்.

எனவே இவர்கள் அனைவரும் தேர்தலில் ஒரு கைகூலியாக செயற்படுகின்றனர் என புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் நன்கு தெரியும்.

சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு: ப.சந்திரகுமார் | Sajith Premadasa Support In Tamil Arasu Katchi

அரச காணிகளில் மோசடிகள் 

அதேவேளை இந்த மாவட்டம் இரத்தம் சிந்தி காக்கப்பட்ட மண் அந்த மண்ணை  கபளீகரம் செய்து கொண்டுசென்று வெளிமாவட்டங்களில் விற்பவர்கள் நல்லாக இருந்ததாக சரித்திரம் இல்லை.

அவ்வாறே மாவட்டத்தில் அரச காணிகளில் நிறைய மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன் சில அரசியல்கட்சிகள் தங்களுக்கு எற்றால் போல வருமானத்தை செய்து சகலத்தையும் சூறையாடியுள்ளனர்.

எனவே எமது தலைவர் சஜித் ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் மோசடிக்கு எதிராக ஒரு ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் இந்த மோசடி கும்பல்களுக்கு மக்கள்  தகுந்த பாடம் படிப்பிப்பார்கள். எங்களுக்கு எதிராக சில கட்சிகள் பொய்யான பிரசாரங்களை செய்துவருகின்றனர் .

எனவே நாங்கள் கிராமம் கிராமமாக வீடு வீடாக சென்று விளக்கமளித்து வருகின்றோம். 90 வீதமான மக்கள் சஜித் தமது இதயத்தில் இருப்பதாகவும் அவருக்கு வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.இருந்தபோதும் மக்கள் எதிர்பார்கின்ற மாற்றம் ஒன்று நடக்கும் நிச்சயம் வெற்றி உறுதியாகிவிட்டது.

எனவே கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் இலஞ்ச ஊழல், கொலைகளுக்கு நீதி கிடைக்காமல் வீதியில் இறங்கி போராடினார்கள். அதற்கான சந்தர்ப்பம் ஜனநாயக  முறையில் கிடைத்துள்ளது.

அதனை சரியாக பயன்படுத்தி சஜித் பிரேமதாசவின் டெலிபோன் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி இடுங்கள். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் 22 ஆம் திகதிக்கு பின்னர் மலரும் என்றார்.

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்

 

கொழும்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க ஆதரவை அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

கொழும்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க ஆதரவை அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US