ரணில் விக்ரமசிங்வின் உடல் நலம் குறித்து சஜித் வெளியிட்டுள்ள தகவல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகசின் சிறைச்சாலையில் நலமாக இருப்பதாகவும் அவருக்கு தேவையான மருந்துகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று மகசின் சிறைச்சாலை வைத்திசாலைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்ட பின்னர் சிறைச்சாலைக்கு முன்னால் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகம்
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,''நாட்டின் சிறப்பான்மைக்குரிய அரசியலமைப்பு மற்றும் நீதியை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். அதை மூன்றாம் தரப்பு ஒருவர் கேலிக்குள்ளாக்குவது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.
அரசு இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது.நாட்டில் ஜனநாயகம் தலைதோங்க வேண்டும் என்றால் மக்கள் அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.''என கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நள்ளிரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




