நாடாளுமன்றில் நேருக்கு நேர் ஜனாதிபதியை கேள்விகளால் துளைத்தெடுத்த சஜித்!
தற்போது நாடு முகங்கொடுக்கும் கோவிட் நெருக்கடி நிலைமையில் கிபிர் விமானங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை அவசியமா? என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் நேற்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து கிபிர் விமானங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிபிர் விமானங்களைப் புதுப்பிக்க அரசு செலவிடவுள்ளது எனக் கூறப்படும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதேபோன்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள உடற்பயிற்சி கூடங்களுக்குச் செலவிடப்படவுள்ள 650 மில்லியன் ரூபாவையும் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குச் செலவிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிதிகள் மூலம் கோவிட் தடுப்பு மருந்து, மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், ஒட்ஸிசன், தடுப்பூசிகள், போன்றவற்றை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, "உடற்பயிற்சிக் கூடங்களுக்கான நிதி கோவிட் நிதியிலிருந்து பெறப்படவில்லை. அது வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி" என்று தெரிவித்தார்.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri