நாடாளுமன்றில் நேருக்கு நேர் ஜனாதிபதியை கேள்விகளால் துளைத்தெடுத்த சஜித்!
தற்போது நாடு முகங்கொடுக்கும் கோவிட் நெருக்கடி நிலைமையில் கிபிர் விமானங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை அவசியமா? என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் நேற்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து கிபிர் விமானங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிபிர் விமானங்களைப் புதுப்பிக்க அரசு செலவிடவுள்ளது எனக் கூறப்படும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதேபோன்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள உடற்பயிற்சி கூடங்களுக்குச் செலவிடப்படவுள்ள 650 மில்லியன் ரூபாவையும் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குச் செலவிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிதிகள் மூலம் கோவிட் தடுப்பு மருந்து, மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், ஒட்ஸிசன், தடுப்பூசிகள், போன்றவற்றை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, "உடற்பயிற்சிக் கூடங்களுக்கான நிதி கோவிட் நிதியிலிருந்து பெறப்படவில்லை. அது வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி" என்று தெரிவித்தார்.
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri