மறைந்த நடிகரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி
மறைந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் அமரசிறி கலன்சூரியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (02) கலந்துகொண்டார்.
1969 இல் 'ரெயக் தவாலத்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த கலன்சூரிய பல திரைப்படங்களிலும், இலங்கையின் முதல் தொலைக்காட்சி நாடகமான 'திமுத்து முத்து'வில் ஜயசேனகே என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இலங்கையின் முதல் தொலைக்காட்சித் தொடர் நடிகராக வரலாறு படைத்த இவர் தீபஷிகா, சரசவிய, ஜனாதிபதி, ஸ்வர்ண சங்க மற்றும் சிக்னீஸ் போன்ற விருதுகள் பெற்றவருமாவார்.
அதேபோல், கொழும்பு, ருஹுனு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் விசேட விருதுகளைப் பெற்ற திறமைமிக்க கலைஞருமாவார்.