மன்னாரில் இலத்திரனியல் வகுப்பறைகளை திறந்து வைத்த சஜித்
மன்னாரில் (Mannar) தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இலத்திரனியல் வகுப்பறைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) திறந்து வைத்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக குறித்த இலத்திரனியல் வகுப்பறைகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் (Rishad Bathiudeen) ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
ஆங்கில புத்தகங்கள்
இதன்போது, தாழ்வுபாடு, தாராபுரம் மற்றும் சித்திவிநாயகர் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில
புத்தகங்களை வழங்கி வைத்ததோடு புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம்
ரூபாய் நிதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 23 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam