அநுர அரசாங்கத்தை வீழ்த்த திட்டம் - சவால் விடும் சஜித்
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என தெரிந்து விடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விட்டுள்ளார்.
இன்று(02.07.2026) இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தலில் தெரியும்..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே அரச பதவிக்கு தகுதியானது ஜே.வி.பி.யா அல்லது உண்மையிலேயே பொதுமக்களுடன் இணைந்து நிற்கும் அரசியல் இயக்கமா என்பதை மக்கள் முன்னிலையில் அறிந்துகொள்ள முடியும். இனியாவது விவசாயிகளை அவமதிப்பதை ஆளும்தரப்பு நிறுத்த வேண்டும்.

இத்தகைய அவமதிப்புகளைச் செய்வதற்கு முன் தங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உரிய தீர்வினை வழங்க முடியாவிட்டால், நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான, யதார்த்தமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதற்குத் தங்கள் தரப்பு தயாராக இருக்கிறது என்றார்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan