அனைத்து மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும்: சஜித் அதீத நம்பிக்கை
வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியடையும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டம், பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மாகாணங்கள், அனைத்து மாவட்டங்கள் மற்றும் அனைத்து பிரதேசங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும் என்பதை சகல ஆய்வறிக்கைகளும் வெளிக்கொணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
எனவே, நாட்டை வெல்லும் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
