கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் நாம் ரணிலுடன் : பிரமித பண்டார
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு வழங்குவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தாமும் தமது தந்தையான ஜனக பண்டார தென்னக்கோனும் ஜனாதிபதிக்கே ஆதரவளிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
தமது தந்தை மட்டுமன்றி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு எரிமலை போன்றிருந்த போது எவரும் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வித தயக்கமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தின் பிரதிபலன்கள் விரைவில் தெரிய வரும் என அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே பூரண ஆதரவு வழங்கப்படும் என பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam