வெளிநாடுகளிடம் உதவி கோரும் தனது முயற்சிகள் தொடரும்! - சஜித் பிரேமதாச
தற்போதைய கோவிட் தொற்றை சமாளிக்க இலங்கைக்கு உதவ வெளிநாட்டு இராஜதந்திரிகளை அணுகுவதற்கான தனது முயற்சிகள் தொடரும் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நோர்வேயிடம் உதவிகளை கோரியுள்ளார்.
சஜித் பிரேமதாச நேற்று மாலை இலங்கையில் உள்ள நோர்வே தூதர் ட்ரைன் ஜோரான்லி எஸ்கெடெயிலை சந்தித்தபோது இந்த உதவியைக் கோரியுள்ளார்.
இலங்கைக்கு தீவிர சிகிச்சை படுக்கைகள், ஒக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் தேவை, எனவே இந்த தேவைகளை பூர்த்தி செய்ய உதவுமாறு நோர்வேயிடம் தாம் கோரியதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.