திடீரென தடைப்பட்ட சஜித் - ரணில் கூட்டணி பேச்சுவார்த்தை
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்கள் தடைபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
ரணில் தரப்பின் நிலைப்பாடு
அதன்படி, பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அந்த விவாதங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் இருந்து தங்கள் கட்சி இன்னும் விலகவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் அண்மையில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்டார்.
தனது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாகவே இந்த விவாதங்களில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிக்குள் நிலவும் இத்தகைய நிலைமை அதன் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என பல அரசியல் தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |