கம்மன்பிலவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறவில்லை - சாகர காரியவசம்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அழித்த ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றுக்கு மீளவும் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள இடமளிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உதய கம்மன்பிலவுடன் தனிப்பட்ட ரீதியில் விரோதம் எதுவும் கிடையாது எனவும், கொள்கை ரீதியில் அவரது நடவடிக்கைகளையே இன்றும் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
