தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அதனை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அங்கப்போர்

அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும் அந்த தடை நீக்கத்திற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.
இதனால், வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பான யோசனையை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அமைச்சவையில் முன்வைத்திருந்ததுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தடை செய்த பிரித்தானியர்

அங்கப்போர் என்பது இலங்கையின் தற்காப்பு சண்டை கலையாகும். இந்த தற்காப்பு சண்டை கலை அன்றைய அரச வம்சத்தினர், பிரபுக்கள் பயிலும் கலையாக இருந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் கண்டி இராஜ்ஜியம் பிரித்தானியரின் காலனித்துவத்திற்கு உட்பட்ட போது, இந்த கலை தடை செய்யப்பட்டுள்ளதுடன் காலப் போக்கில் அது அழிந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சிங்களத்தில் அங்கம்பெர எனக் கூறுகின்றனர்.
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? Manithan