தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அதனை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அங்கப்போர்
அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும் அந்த தடை நீக்கத்திற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.
இதனால், வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பான யோசனையை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அமைச்சவையில் முன்வைத்திருந்ததுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தடை செய்த பிரித்தானியர்
அங்கப்போர் என்பது இலங்கையின் தற்காப்பு சண்டை கலையாகும். இந்த தற்காப்பு சண்டை கலை அன்றைய அரச வம்சத்தினர், பிரபுக்கள் பயிலும் கலையாக இருந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் கண்டி இராஜ்ஜியம் பிரித்தானியரின் காலனித்துவத்திற்கு உட்பட்ட போது, இந்த கலை தடை செய்யப்பட்டுள்ளதுடன் காலப் போக்கில் அது அழிந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சிங்களத்தில் அங்கம்பெர எனக் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
