சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் : அசோக ரன்வல
தகவல் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அரசாங்கத்தால் கொண்டு வர முடியாவிட்டால் ஜூன் 23ஆம் திகதிக்கு பின்னர் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினை
சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடினால் மக்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பில் எரிபொருள் வழங்கப்படுவதால், எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தடுக்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருளின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் |