ஒரு மாதத்திற்கு 4700 லீட்டர் எரிபொருள் பாவனை: மோசடியில் சிக்கிய முன்னாள் அரசியல்வாதி
சப்ரகமுவ மாகாண சபையின் 2016 -2017 ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த மகிபால ஹேரத் ஒரு மாதத்திற்கு 4700 லீட்டர் எரிபொருளை தனது பாவனைக்காக எடுத்து கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த பெரும் மோசடி தொடர்பில் கோப்பா குழுவிலும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பிடப்பட்ட தகவல்களின் படி 2016 ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மகிபால ஹேரத் பதவியில் இருந்துள்ளார்.
முதலமைச்சரின் பதவி நிலை
அக்காலத்தில் அவர் பல செயற்றிட்டங்களை சப்ரகமுவ மாகாணத்தில் செயற்படுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் பதவி நிலைக்கு 1700 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி, இயந்திர உபகரண அதிகார சபையிலிருந்து 1500 லீட்டரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து மேலும் 1500 லீட்டரும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன் படி, நாளொன்றுக்கு 155 லீட்டர் பாவித்துள்ளார். அப்படியானால் அவர் நாளொன்றுக்கு 450 கிலோ மீட்டர் தனது வாகனத்தில் பயணத்திருக்க வேண்டும்.
இவ்வாறே அரச அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர். இதேபோல் வெளிவராத பல மோசடிகள் இருக்கின்றன என ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
