ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு பொறுப்பு சாகல ரத்நாயக்கவுக்கு
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முழு பொறுப்பும் கட்சியின் உப தலைவரான சாகல ரத்நாயக்கவுக்கு(Sagala Ratnayakke) வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன(Vajira Abeywardena ) இந்த மறுசீரமைப்பு பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுதில்லை என்பதால், கட்சியின் தலைமை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுடன் சாகல ரத்நாயக்க, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.