உக்ரைனில் ரஸ்யாவுக்காக போராடியே எனது குடும்பத்துக்கு உணவளிக்கிறேன்! சிரிய போராளி!(Video)
ரஷ்யாவுக்காகப் போராடுவதன் மூலம் தமது குடும்பத்திற்கு உணவளிப்பதாக சிரிய நாட்டின் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக முன் வரிசையில் நின்று போராடும் சிரிய போராளிகளுக்கு மாதம் 5,000 பவுண்ஸ்கள் வழங்கப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா ஒரு படுகொலையை நடத்துவதாக தான் நம்புவதாகவும், ஆனால் அது வறுமையான ஏழையான சிரியர்களுக்கு உதவுவதாகவும் சிரிய போராளி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாம் உக்ரைனுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டால் தமது குடும்பத்துக்கு 37,000 பவுண்ஸ்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக குறித்த போராளி தெரிவித்துள்ளார்..
குறைந்தது 200 போராளிகள் ரஷ்யாவுக்கு போர் புரிகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட, சிரியா முழுவதும் 14 ஆட்சேர்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசாங்கமும், முன்னணி சிரிய அரசு சாரா அமைப்பும் ஒன்றும் கூறுகின்றன.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
