கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
கொழும்பு - வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியொருவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (01) கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்யா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவரை 9ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியொருவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பரவியதை அடுத்து, பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
புலனாய்வுக்குழுக்கள் விசாரணை
இந்த சம்பவம் கொழும்பின் வெலிக்கடை பகுதியில் கடந்த மே 29 ம் திகதியன்று நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேகநபரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நடத்த இரண்டு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO