சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை கோரும் முன்னாள் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ தனது நாட்டிற்கு அதிக ஆயுதங்களை வழங்குமாறும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு தொடர்ந்து தடை விதிக்குமாறும் சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"அமைதிக்கான குறுகிய வழி உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாகும்" என்று போரோஷென்கோ சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"சர்வதேச சமூகத்திலிருந்து, எங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை அவை ஆயுதங்கள், ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள்."
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி, 'ரஷ்யாவைத் தொடர்ந்து தடைசெய்யவும், அதன் தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்க உக்ரேனிய வான்வெளியை மூடவும் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
மேலும், மேற்கத்திய உலகம் ரஷ்யாவையும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் "முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும்.
இது தனது நாட்டின் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
