தப்பிச்செல்ல முயன்ற உக்ரைனிய பொதுமக்கள் மீது ரஸ்யர்கள் தாக்குதல். நால்வர் பலி!
நான்கு உக்ரைனியர்கள் கிழக்கு நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது ரஸ்யப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. லுஹான்ஸ்க் பிராந்தியத் தலைவர் செர்ஹி ஹைதாயின் ஆரம்பத் தகவலின்படி, கிரெமின்னா நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நான்கு பொதுமக்களே சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்
தனியாக சிற்றூந்து ஒன்றில்; செல்ல முயன்ற பொதுமக்கள் மீது ரஸ்ய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
உக்ரைனும் ரஸ்;யாவும் பொது மக்கள் வெளியேறும் திட்டங்களில் உடன்படத் தவறிய நிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் போரில் இருந்து தப்பிச் செல்லும் உக்ரைனிய குடிமக்களுக்கு மனிதாபிமான வெளியேற்ற வழிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கிரெமின்னாவை விட்டு வெளியேற முயற்சிக்காதீர்கள்! இது ஆபத்தானது! என்று லுஹான்ஸ்க் பிராந்தியத் தலைவர் எச்சரித்துள்ளார்
ரஸ்யர்கள் நகரத்தை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் சண்டை தொடர்வதால், இனி நகரத்திலிருந்து வெளியேறுவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
