போருக்கு மத்தியிலும் நாட்டுக்கு திரும்பி வரும் உக்ரைன் மக்கள்
உக்ரைனில் போர் ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக போலந்துக்கு அகதிகளாக சென்றவர்களை விட அதிகமான மக்கள் நாட்டிற்குள் வந்துள்ளனர்.
உறவினர்களைப் பார்க்க அல்லது அவர்களின் வீடுகளுக்குச் செல்வோர் என்ற அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று 19,200 பேர் உக்ரைனில் இருந்து போலந்துக்கு சென்றனர். எனினும் 22,000 பேர் உக்ரைனுக்குள் சென்றதாக போலந்து எல்லை சேவையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சிலர் குடும்பத்தைப் பார்ப்பதற்காகத் திரும்பி வருகிறார்கள்,
ஒருவேளை சில நாட்களுக்கு மட்டும் தங்கியிருந்துவிட்டு திரும்பி செல்வதற்கும் அவர்கள் உக்ரைனுக்குள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தலைநகர் கிய்வின் முதல்வர்; விட்டலி கிளிட்ச்கோ போன்ற அதிகாரிகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், உக்ரைனுக்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, போர் ஆரம்பித்ததில்; இருந்து மில்லியன் கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்
இதில் 650,000 க்கும் அதிகமானோர் போலந்திலிருந்து வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
