உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது: ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் உக்ரைன் பயன்படுத்தும் என்று ரஷ்யா கவலைப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இதன்போதே மேற்கண்டவாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் மறுப்பு
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் ரஷ்யா வழங்காத போதிலும், உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் தரப்பு மறுத்துள்ளது. இதேபோல் ரஷ்யாவின் கவலை மற்றும் குற்றச்சாட்டை உக்ரைனும் மறுத்துள்ளது.
ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷ்யாவுக்கு மட்டுமே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
