உக்ரைன் படையினரிடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள்
ரஷ்ய வீரர்களை சித்திரவதை செய்ததாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றவியல் வழக்குகளைத் தொடரவுள்ளதாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைனின் தலைநகர் கிவ் உட்பட அனைத்து நகரங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வான்வழி தாக்குதல்களை நடத்தி உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,உக்ரைன் படையினரும் எதிர் தாக்குதலை மேற்கொண்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் உக்ரைனியப் படைகளால் ஜாபோரிஜியா (Zaporizhzhia) மற்றும் மைகோலெய்வ் (Mykolaiv) பகுதிகளில் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,உண்மையான நிலைமைகள் குறித்து தவறான விளக்கங்களை வழங்குவதற்காக ரஷ்யர்கள் உடல்ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர்க் கைதிகளை நடத்துவது தொடர்பான அனைத்து தகவல்களையும் சரிபார்ப்பதாகவும், ஏதேனும் மீறல்கள் இருந்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
