ரஷ்ய ஜனாதிபதி புடினின் திடீர் மன மாற்றம் - இப்படிக்கு உலகம் தொகுப்பு
எதிர்வரும் வாரங்களில் உக்ரேனிய எல்லைக்கு அருகிலும், கிரிமியன் தீபகற்பத்திலும் நிறுத்தப்பட்டுள்ள தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் குறிக்கோள்கள் எட்டப்பட்டுள்ளன என்றும், பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் (Sergei Shoigu) வியாழக்கிழமை கிரிமியாவிற்கு ஒரு இராணுவம் தொடர்பான பயணத்தின் போது தெரிவித்தார்.
மேலும் வெள்ளிக்கிழமை முதல் துருப்புகள் தங்கள் தளங்களுக்கு திரும்புமாறு அவர் உத்தரவிட்டமை மட்டுமின்றி மே 1 ம் திகதிக்குள் இந்த நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,