பசுபிக் பெருங்கடலினை சுற்றிவரும் ரஷ்ய மற்றும் சீன போர்க் கப்பல்கள்!
ரஷ்ய மற்றும் சீன போர்க்கப்பல்கள் பசுபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் முதன்முறையாக கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையானது சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு நாட்டிலும் தலா ஐந்து கப்பல்கள் உள்ளடங்கலாக ரோந்து பணிகளில் மொத்தம் 10 போர்க்கப்பல்கள் பங்கெடுத்துள்ளன.
கடந்த ஒக்டோபர் 17 தொடக்கம் ஒக்டோபர் 23 நேற்று சனிக்கிழமை வரை சுமார் ஒரு வாரகாலம் இந்த ரோந்துப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
ரஷ்யா மற்றும் சீனாவின் அரச கொடிகளை நிரூபிப்பது, ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவது மற்றும் இரு நாடுகளின் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளின் வசதிகளைப் பாதுகாப்பதும் இந்த கூட்டு ரோந்து பணிகளின் நோக்கம்.
ரோந்துப் பணியின் போது, போர்க்கப்பல்களின் குழு முதன்முறையாக சுகாரு நீரிணை வழியாக சென்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாரு நீரிணை என்பது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஜப்பானிய தீவுகளான ஹொன்ஷு மற்றும் ஹொக்கைடோ ஆகியவற்றுக்கு இடையேயான நீர் அமைப்பாகும்.
இது பசுபிக் பெருங்கடலுடன் ஜப்பான் கடலை இணைக்கிறது. ரோந்து பணிக்கு மேலதிகமாக இரு கடற்படைகளும் கூட்டு தந்திரோபாய சூழ்ச்சிகளை மேற்கொண்டன மற்றும் தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,