ரஷ்ய - உக்ரைன் போரில் புதிய திருப்பம்.. நடைபெறவுள்ள அதிமுக்கிய கூட்டங்கள்
ரஷ்யாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரம் குறித்து எதிர்வரும் வாரங்களில், உக்ரைனில் முக்கியமான கூட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவுள்ளதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் பல முக்கிய சந்திப்புக்க தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ வலைதளத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், "எதிர்வரும் வாரங்களில், உக்ரைனில் முக்கியமான கூட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறும்.
ரஷ்யாவின் பொய்யான வாக்குறுதி
ஜூன் மாத உச்சிமாநாடுகள், கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாடு மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாடு என்பன வெறுமையாக முடியாமல் இருக்க நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
ரஷ்யா உண்மையிலேயே ஒரே ஒரு மொழியை மட்டுமே புரிந்துகொள்கிறது - போரின் மொழி. அதுதான் வரும் மாதங்களில் அனைத்து வகையான சர்வதேச ஈடுபாட்டிலும் செயல்படும் மொழியாக மாற வேண்டும்.
In the coming weeks, important meetings and negotiations will take place in Ukraine, and we are doing everything to ensure that the June summits—the G7 Summit in Canada and the NATO Summit in the Netherlands—are not hollow.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) June 8, 2025
Russia only truly understands one language — the… pic.twitter.com/Ja26WEb25f
நமது போர்க் கைதிகளின் விடுதலையையும், வீழ்ந்த நமது போர்வீரர்களின் மீள் வருகையையும் உறுதி செய்வதற்கு உக்ரைன் தொடர்ந்து எல்லாவற்றையும் செய்து வருகிறது.
இஸ்தான்புல்லில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பரிமாற்றத்திற்கான ரஷ்யாவின் முழு பட்டியல்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
வழக்கமான முறையில், ரஷ்ய தரப்பு மீண்டும் இந்த விடயங்களைக் கூட ஒரு மோசமான அரசியல் மற்றும் தகவல் விளையாட்டாக மாற்ற முயற்சிக்கிறது. எங்கள் பங்கிற்கு, பரிமாற்றப் பாதையை முன்னோக்கி நகர்த்துவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
