ரஷ்யா அனுப்பிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்: வலுவிழக்கும் உக்ரைன்
138 ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா நடாத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல்களில் பலியான பெண் உக்ரைனின் கெர்சன் நகரை சேர்ந்தவர் என்பதோடு இதில் 8 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
இது தொடர்பில் உக்ரைனின் விமானப்படை கூறுகையில், ரஷ்யா ஒரே இரவில் 138 ஏவுகணைகளை ஏவியதாகவும் அதில் 88 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடுமையான குளிர்காலம்
சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் எஞ்சிய பகுதிகள் உக்ரைன் தலைநகர் மீது விழுந்ததில் ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, உக்ரைனின் டன்பாஸ் (Donbas) பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோல்னே (Rozdolne) கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் கடுமையான குளிர்காலத்தில் நுழையும்போது இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
