கொழும்பு புகைப்பட கண்காட்சியால் அதிருப்தி அடைந்துள்ள ரஷ்யா!
கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியில் ரஷ்ய எதிர்ப்பு கண்காட்சிகளை அனுமதிக்கும் முடிவுக்கு அந்நாடட்டு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பிற்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜாகரியன்(Levan S Dzhagaryan ), இந்த நடவடிக்கையால் சற்று ஏமாற்றத்தை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை பத்திரிகை நிறுவனம்
“இலங்கை பத்திரிகை நிறுவனம் மற்றும் கொழும்பில் சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில் ரஷ்ய எதிர்ப்பு புகைப்படங்களால் தூதரகம் கலக்கமடைந்துள்ளது.
மேற்கத்திய மற்றும் உக்ரைன் சார்பான விளக்கத்தை வலியுறுத்தி, உக்ரேனிய பிராந்தியத்தில் தற்போதைய நிகழ்வுகளை ஒரு பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்சமான முறையில் இந்த உள்ளடக்கம் பிரதிபலிக்கிறது.
அதே நேரத்தில், டான்பாஸில் வசிப்பவர்களுக்கு எதிரான ஜெலென்ஸ்கி ஆட்சியின் குற்றங்கள், உக்ரைனின் ரஷ்ய மொழி பேசும் மக்களின் உரிமைகளை மீறுதல், ரஷ்ய பத்திரிகையாளர்களை குறிவைத்து கொலை செய்தல் மற்றும் கியேவ் நாஜி ஆட்சிக்குழுவால் மின்ஸ்க் ஒப்பந்தங்களின் துரோக மீறல் குறித்து இங்கு வெளிப்படுத்தப்படவில்லை” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
