ரஷ்யாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி இன்று இலங்கை வருகின்றார்
இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) பாதுகாப்புப் பேரவை பிரதானி நிகோலாய் பட்ருஷேவ் (Nikolai Patrushev) , பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் அலுவலக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.