உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு என ரஷ்யா அறிவிப்பு - உலக செய்திகளின் தொகுப்பு
உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 54ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் படை வீரர்களில் 23 ஆயிரத்து 300 பேர் இதுவரை கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷ்ய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவ அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி போர் தாக்குதல் பற்றிக் கூறும்போது, உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த சிறப்பு இராணுவ நடவடிக்கையில், உக்ரைனிய படையில் உள்ள மொத்தம் 470 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam