கிராமப்புற பாடசாலைகளின் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள தீர்மானம்
கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளின் மேலதிக ஆசிரியர்களை வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றும் தீர்மானமொன்றை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
அதன் பிரகாரம் கிராமப் புற பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இடமாற்றம்
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் அவ்வாறான மேலதிக ஆசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும்இ 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் பிரதிக் கல்வி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri