நாட்டின் 119,000 கிலோமீட்டர் வீதியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்
நாட்டின் 119,000 கிலோமீட்டர் வீதி வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபைப் பகுதிகளில் கிராமப்புற வீதிகளை நவீனமயமாக்கும் பணி அதிகாரசபையின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.
தேசிய கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த தேர்தல் தொகுதியில் வீதி அபிவிருத்தியை ஆரம்பித்து வைத்துப் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
14 பில்லியன்
கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 கிராமப்புற வீதிகள் நவீனமயமாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த ஆண்டு ரூ. 14 பில்லியன் ஒதுக்கியுள்ளது, அடுத்த ஆண்டு மேலதிக நிதியும் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



