டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான முக்கிய விசாரணை! அம்பலமாகும் சர்ச்சைகள்

Basil Rajapaksa Tiran Alles Sri Lanka Police Investigation
By Dharu Sep 17, 2025 07:48 AM GMT
Report

சுனாமியால் இடம்பெயர்ந்த வடக்கு - கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட RADA நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி விசாரணை தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

வடக்கு - கிழக்கு புனரமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (RADA) என நிறுவப்பட்ட பின்னணியில் அங்கு இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் குறித்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமியால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்காக "ஜெயலங்கா" என்ற அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் வீடுகளை கட்டுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (RADA) நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது.

இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல் - ஒருவர் கொடூரமாக கொலை

இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல் - ஒருவர் கொடூரமாக கொலை

சாலிய விக்ரமசூரிய

இதன்படி RADAவின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ், RADAவின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி சாலிய விக்ரமசூரிய, RADAவின் முன்னாள் கணக்காளர் ஜெயந்த டயஸ் சமரசிங்க மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் அந்தோணி எமில் காந்தன் ஆகியோருக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான முக்கிய விசாரணை! அம்பலமாகும் சர்ச்சைகள் | Investigation Against Four People Including Tiran

அந்த நிறுவனம் எந்த வீடுகளையும் கட்டாமல் ரூ. 124 மில்லியன் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குறித்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ராடாவை நிறுவியதன் முதன்மையான நோக்கம், சுனாமியால் அழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் வீடுகளை மீண்டும் கட்டுவதாகும்.

இருப்பினும், 1,200 வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கிய போதிலும், அதில் இடம்பெற்ற பாரிய மோசடி விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, அந்தப் பணத்தில் ஒரு பகுதி டிரான் அலஸின் பைகளுக்கு சென்றதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அப்போது கேள்வி எழுந்தது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற மகிந்த ராஜபக்சவால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு(வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தரப்புக்கு) பணம் கொடுக்கப்பட்டது என்பதை டிரான் அலஸ் உறுதிப்படுத்தினார்.

2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய எவருடனும் பசில் ராஜபக்சவை சந்திக்குமாறு மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில் டிரான் அலஸைக் கேட்டுக்கொண்டார்.

மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு

மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு

பசில் ராஜபக்ச

அதன்படி, டிரானின் நண்பரான எமில் காந்தனுக்கும் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே ஒரு சந்திப்பை டிரான் அலஸ் ஏற்பாடு செய்தார் என்பபை குறித்த ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான முக்கிய விசாரணை! அம்பலமாகும் சர்ச்சைகள் | Investigation Against Four People Including Tiran

2005 ஆம் ஆண்டு மகிந்தவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத் தலைவரான பசிலுக்கும், எமில் காந்தனுக்கும் இடையிலான சந்திப்பு, டிரான் அலஸின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

அந்த நேரத்தில், பசில் ராஜபக்ச, தனது சகோதரரும் அப்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் வெற்றியைப் பெறுவதற்காக, தேர்தலைப் புறக்கணிப்பதில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களை வழிநடத்துமாறு எமில்காந்தனிடம் முன்மொழிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணமும் படகுகளும் தேவை என்று எமில் காந்தன் பசிலிடம் தெரிவித்ததாகவும், அதன்படி, ஜனவரி 22, 2010 அன்று தனது வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், டிரான் அலஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், எமில் காந்தனுக்கு ஆரம்பத்தில் பெரிய அளவிலான பணம் பெரிய பயணப் பைகளில் முன்பணமாக வழங்கப்பட்டதாக வெளிப்படுத்தினார்.

ராடா நிறுவப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, டிசம்பர் 30, 2005 அன்று, டிரான் அலஸ் மற்றும் சாலிய விக்கிரமசூரிய, எமில் காந்தனுடன் சேர்ந்து, கிளிநொச்சிக்குச் சென்று, கிளிநொச்சி பிராந்தியத் தலைவரான 'புவண்ணன் இனியவன்' உடன் கலந்துரையாதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் இனியவனுடன் சேர்ந்து, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்கான பெயர் பட்டியலைக் கோரியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு

900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு

வீடுகளை கட்டுவதற்கான ஒப்பந்தம்

அந்த நபர்களுக்கு வீடுகளை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பது, அரசாங்க நடைமுறைக்கு வெளியே, பிராந்தியத் தலைவர் புவண்ணன் இனியவன் மற்றும் ராடா தலைவர் டிரான் அலஸ் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பில் 400 வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறர். போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஒரு வீடு கூட கட்டாமல் 9 காசோலைகளிலிருந்து சுமார் 125 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளமை அப்போதைய விசாரணைகளில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக, பிரதேச செயலாளர்களின் கையொப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் பலவந்தமாகப் பெறப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய அறிக்கைகளில்,

டிரான் அலஸின் அரசியல் செல்வாக்கு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி, பிரதேச செயலாளர்கள் தொடர்புடைய கையொப்பங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடுகின்றன என்பதை குறித்த ஊடகம் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூன் 2006 நிலவரப்படி, ராடா மீது எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அரசாங்க சொத்துக்கள் மற்றும் நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது.    

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US