இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இரு பாதாள குழு தலைவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை
இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'பேக்கோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' என அழைக்கப்படும் பாதாள உலக நபர்கள் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் இந்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு முன்னதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.
இந்தோனேசியாவில் கைது
'கணேமுல்ல சஞ்சீவ' கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல கொலைகளில் ஈடுபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களான 'கெஹல்பத்தர பத்மே' உட்பட ஐந்து நபர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா காவல்துறையின் சிறப்புக் குழு இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் மூலம் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri