தொடரும் பேருந்து சாரதிகளின் அலட்சியம்: தட்டிக் கேட்ட பயணிக்கு சாரதி அளித்த பதில்...!
நாட்டில் தினமும் விபத்துக்கள் காரணமாக பல உயிர்கள் பலியாகின்றன.
இந்த வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமும் ஒரு முக்கிய காரணியாக அமைகின்றது.
அதாவது வேறு பேருந்துகளை அல்லது வாகனங்களை முந்தி செல்வதற்காக அதிக வேகமாக வாகனத்தை செலுத்தல்,வாகனம் செலுத்தும் போது போதை பொருட்களை பயன்படுத்தல் மற்றும் தொலைபேசி பயன்படுத்தல் என சாரதிகளின் கவனயீனமான செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அண்மையில் எல்ல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து, பேசுபொருளாக மாறிய நிலையில் தற்போது சாரதிகளின் நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், பேருந்து சாரதி ஒருவர் தொலைப்பேசியை பயன்படுத்தி கொண்டு பேருந்து செலுத்தியுள்ளார்.
அதனை தட்டி கேட்ட பயணியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றது.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam