வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மற்றுமொரு முகவர் நிறுவனம்
கம்பஹா மீரிகம நகரில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு மீரிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் டுபாய்க்கான வேலைவாய்ப்பு விசாக்களை வழங்கியுள்ளதாகவும், இந்த நிறுவனம் அக்டோபர் 2024 இல் நிறுவப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு
குறித்த அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மீரிகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க வெளிவிவகார அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சந்தேகநபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
