கொழும்பில் இளம் யுவதிக்கு உதவிய குடும்பம் ஒன்றுக்கு அதிர்ச்சி : கொலை மிரட்டல் விடுக்கும் மர்ம கும்பல்
கொழும்பில் வாடகைக்கு வீடு மற்றும் வாடகைக்கு அறைகள் தேடும் போர்வையில் பாரிய கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வீடு மற்றும் அறைகள் வாடகைக்கு உண்டு என விளம்பரப்படுத்துபவர்களை குறிவைத்து சிலரால் இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாரிய மோசடி
அண்மையில் கொழும்பு - கிரான்ட்பாஸில் வாடகைக்கு அறை இருப்பதாக இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்திய பெண் ஒருவர் பாரிய மோசடியில் சிக்கி தனது தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களை இழந்துள்ளார்.
குறித்த விளம்பரத்தை பார்வையிட்ட ஒரு யுவதி, வீட்டு உரிமையாளரான பெண்ணைத் தொடர்பு கொண்டு வாடகைக்கு அறையைப் பெற்றுள்ளதுடன், முற்பணமாக ஒரு சிறிய தொகையையும் செலுத்தியுள்ளார்.
தான் மகரகம பகுதியில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளதுடன், தனது அடையாள அட்டையின் பிரதி ஒன்றையும் வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு, குறித்த யுவதி வழங்கியுள்ளார்.
இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் தங்கியிருந்துள்ளதுடன், இரு நாட்களின் பின்னர் வீட்டு உரிமையாளரான பெண் பணிக்குச் சென்ற பிறகு கொள்ளை நடவடிக்கையில் குறித்த யுவதி ஈடுபட்டுள்ளார்.
அந்த வீட்டின் ஏனைய அறைகளின் கதவுகளை கூரான ஆயுதங்கள் கொண்டு திறந்து அதிலிருந்து இலட்ச ரூபா பெறுமதி மிக்க நகைகள் மற்றும் உடைகள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை களவாடிச் சென்றுள்ளதுடன், சமையல் செய்து உண்டுவிட்டும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலையில் வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளரான பெண் மற்றும் அவரின் தங்கை ஆகியோர் அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சோதனை செய்து பார்த்ததில் வாடகைக்கு அறைக் கேட்டு வந்த பெண் அனைத்துப் பொருட்களையும் திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணை தேடும் முயற்சியிலும் வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உயிரச்சுறுத்தல்
இதனையடுத்து, முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோசடி செய்த யுவதியின் அடையாள அட்டை பிரதியை பதிவிட்டு தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது, மோசடி செய்த யுவதியுடன் தொடர்புடைய சிலரால் வீட்டு உரிமையாளருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் இடம்பெற்று ஒரு சில தினங்களின் பின்னர், கொள்ளையில் ஈடுபட்ட யுவதி, வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு பிரிதொரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து மிரட்டல் விடுக்கும் தொணியில் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாலும் கூட, தன்னைப் பிடிக்க முடியாதென்றும், பொலிஸார் அல்ல ஜனாதிபதியே வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாதென்றும் யுவதி குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு நேரடி உயிரச்சுறுத்தல் விடுத்ததுடன், தன்னுடைய குழுவினரால் எதையும் செய்ய முடியும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் தேடுதல் நடவடிக்கையை கைவிடாத வீட்டார், குறித்த யுவதியின் அடையாள அட்டை விலாசத்தை வைத்து வீடு வரை தேடிச் சென்ற போது உடைகள் உள்ளிட்டவற்றை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொள்ளையில் ஈடுபட்ட யுவதிக்கு 25 வயது என்றும், இரு பிள்ளைகளின் தாயாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதியின் பின்னால் மிகப்பெரிய குற்றக் கும்பல் இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
