இருபது வருட சகாப்தத்தை முடித்துக்கொண்ட ரொனால்டோ
நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோ காற்பந்துத் தொடரே (Euro League) தனது கடைசி யூரோ தொடர் என போர்த்துக்கல் (Portugal) காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Christiano Ronaldo) தெரிவித்துள்ளார்.
ரொனால்டோ கடந்த இருபது வருடங்களாக யூரோ காற்பந்துத் தொடர்களில் விளையாடி வருகின்றார்.
ஸ்லோவேனியா (Slovenia) அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் மிகுதி நேரத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ, மைதானத்திலேயே கண்கலங்கினார்.
கடைசி யூரோ
எவ்வாறாயினும், இரு அணிகளும் கோல் எதனையும் போடாததால் பெனால்ட்டி முறையில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.
Cristiano Ronaldo misses a penalty against Slovenia and bursts into tears. ? pic.twitter.com/rhuB34yotH
— Evinstein ? (@Evinst3in) July 2, 2024
அதனையடுத்து, போர்த்துக்கலை சேர்ந்த ஒளிபரப்பாளர் ஒருவருக்கு கருத்து தெரிவிக்கையில் இதுவே தனது கடைசி யூரோ கிண்ணத் தொடர் என ரொனால்டோ கூறினார்.
2004 முதல் 2024 வரை யூரோ தொடர்களில் விளையாடியுள்ள ரொனால்டோ, இதுவரை குறித்த தொடர்களில் 14 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
