இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் ரோமானியாவின் எல்லையில் தடுத்து வைப்பு
இலங்கை உட்பட்ட பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 18 பேர் கொண்ட புலம்பெயர்ந்தோரின் இரண்டு குழுக்கள், ரோமானியாவின் அராட் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரோமானியாவின் எல்லைப்பகுதியில் வைத்து அராட் எல்லைக் பொலிஸாரால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அராட் பொலிஸாரின் தகவலின்படி, நேற்று வியாழனன்று புலம்பெயர்ந்தோர் ஹங்கேரி எல்லையை நோக்கி நடந்து கொண்டிருந்த போது இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் விசாரணை
தம்மை உரியவகையில் அடையாளப்பபடுத்தாமைக் காரணமாக அவர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து, அவர்கள் 20 முதல் 48 வயதுக்குட்பட்ட இலங்கை,
பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள்
சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது
இதனையடுத்து அவர்கள் தொடர் விசாரணைகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Tamizha Tamizha: வீட்டில் அழுக்கு நைட்டியுடன் இருக்கும் அம்மா! அலுவலகத்தில் அசிங்கப்படுத்திய மகன் Manithan
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri