பிரபல அரசியல்வாதியின் மகள் பொலிஸில் சரண்
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தனவின் புதல்வி மெலனி குணவர்தன பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள லேண்ட் குரூசர் ஜீப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்னை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றின் உத்தரவு
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோஹிதவின் மகள் மெலனி மற்றும் அவரது கணவரை கைது செய்யுமாறு மத்துகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், சில நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், தற்பொழுது மெலனி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்த இருவருக்கு எதிராகவும் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதிதிருந்ததுடன் பொலிஸார் கைது செய்யும் நோக்கில் தேடுதல் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ரோஹிதவின் மகள் மெலனி, பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
மெலனியை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
