தவறான முடிவெடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்ட ரோபோ
தென் கொரியாவில் அரசாங்க சேவையில் கடமையாற்றி வந்த ரோபோ இயந்திரம் ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென் கொரியாவின் கூமி நகர சபையில் ஒரு வருட காலமாக பணியாற்றி வந்த இயந்திரம் இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளது.
இந்த இயந்திரத்தின் அங்கங்கள் ஏற்கனவே சேதமடைந்திருந்ததாகவும் இது 2 மீட்டர் உயரம் கொண்ட படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கவலை
படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் அது சுழன்று கொண்டிருந்ததாகவும் அதற்கு பின்னர் கீழே விழுந்ததாகவும் நகர சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கூமி நகர மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கான தொழில்நுட்ப காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri

மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற முழுநேர வேலையுடன் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள பெண் News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
