யாழில் பெருந்தொகை மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணம்-ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில்,36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று(13.06.2023) இரவு இரண்டு பெண்கள்
வசித்துவரும் வீட்டில் அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை
உடைத்து வீட்டில் இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண்
நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
கைப்பையுடன் திருடப்பட்ட நகைகள்
வீட்டினுடைய அறையை காலை திறந்து பார்க்கின்ற போது கைப்பை அதிலிருந்த நகைகளுடன் கொள்ளையடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |