பொலிஸ் சீருடையில் வீடொன்றிற்குள் புகுந்து துணிகர கொள்ளை: புத்தளத்தில் சம்பவம்
புத்தளம் (Puttalam) - கற்பிட்டி பகுதியில் பொலிஸ் சீருடையில் வீடொன்றிற்குள் புகுந்த மூவர் 8 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது, கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குற்றவாளிகள் 8 மில்லியன் பணம் மற்றும் சுமார் 40 சவரன் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
வலம்புரி சங்கு
சம்பவத்தின் போது, கொள்ளையிட்டவர்கள் வலம்புரி சங்கினை தேடுவதாக கூறி குறித்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இதன் பின்னர், குடியிருப்பாளரின் கைகளையும் கால்களையும் கட்டி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டு சென்றுள்ளனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |